எங்கள் கதை
எங்கள் கதை
சமூக சமரச நிலையத்தில் (CMC) செய்யப்படும் சமரசமானது மற்றவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்றால், சர்ச்சைக்குரிய தரப்பினருக்கு இடையிலான உறவுகளைச் சரிசெய்வதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
சட்ட அமைச்சின் (MinLaw) கீழ் இயங்கும் சமூக சமரச நிலையம் (CMC), சிங்கப்பூரில் வசிப்பவர்கள் சந்திக்கும் உறவுமுறை சார்ந்த மற்றும் சமூகச் சர்ச்சைகளுக்கான சமசரச் சேவையை வழங்குகிறது.
எங்கள் சமரச நிபுணர்கள் எளிதாக்கப்பட்ட செயல்முறை மூலம் தரப்பினர்கள் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் நோக்கத்துடன், அவர்கள் முக்கியமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைகளைப் பற்றி கருத்து பரிமாறிக்கொள்ள உதவுகிறார்கள்.
கூட்டு மற்றும் தனிப்பட்ட அமர்வுகள் மூலம் சர்ச்சைக்குரிய தரப்பினரிடையே அதிகப் புரிதலை வளர்ப்பதும், பரஸ்பரமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை எட்டுவதும், உறவுகளைப் பேணுவதும் தான் சமரசத்தின் நோக்கமாக உள்ளது.
ஒரு நேரத்தில் ஒரு சர்ச்சையைத் தீர்ப்பதன் மூலம், சிங்கப்பூரில் வசிப்பவர்களுக்கு மேலும் கனிவான மற்றும் இணக்கமான வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
சமூக சமரச நிலையமானது முழுநேர சட்ட அமைச்சு (MinLaw) அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது, இவர்கள் சமூக சமரச நிலையத்தின் நிர்வாகம் மற்றும் மேலாண்மைக்குப் பொறுப்பானவர்கள், மேலும் இந்நிலையமானது பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த தொண்டூழிய சமூக சமரச நிபுணர்கள் குழுவால் மேம்படுத்தப்படுகிறது.